ரூ.50,000 கோடி நிதி திரட்ட எஸ்பிஐ முடிவு

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), கடன் பத்திர வெளியீடு மூலம் ரூ.50,000 கோடி திரட்ட முடிவு செய்துள்ளது.
ரூ.50,000 கோடி நிதி திரட்ட எஸ்பிஐ முடிவு
Updated on
1 min read

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), கடன் பத்திர வெளியீடு மூலம் ரூ.50,000 கோடி திரட்ட முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மும்பை பங்குச் சந்தையிடம் வங்கி தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பங்குகளாக மாற்றிக் கொள்ளக் கூடிய, பேசல்-3 நிா்ணயங்களை நிறைவு செய்யும் நீண்ட கால கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் ரூ.50,000 கோடி மூலதனம் திரட்ட இயக்குநா் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

2024-ஆம் நிதியாண்டுக்குள் உள்நாடு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளா்களிடமிருந்து இந்த மூலதனம் திரட்டப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com