ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

எண்ணெய் பொருள்கள் ஏற்றுமதி அக்டோபரில் 36 சதவிகிதம் அதிகரிப்பு!

சோயாபீன் மற்றும் ராப்சீட் ஏற்றுமதியால் எண்ணெய் பொருள்கள் ஏற்றுமதி, கடந்த மாதம், 36 சதவிகிதம் அதிகரித்து, 2.9 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.

News image
Updated On :17 நவம்பர் 2023, 4:05 pm

DIN

புதுதில்லி:  சோயாபீன் மற்றும் ராப்சீட் ஏற்றுமதியால் எண்ணெய் பொருள்கள் ஏற்றுமதி, கடந்த மாதம், 36 சதவிகிதம் அதிகரித்து, 2.9 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.

சால்வென்ட் எக்ஸ்ட்ராக்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா தரவுகளின்படி, அக்டோபர் மாதத்தில் எண்ணெய் பொருள்களின் ஏற்றுமதி 2,89,931 டன்னாக இருந்தது. அதே வேளையில் சோயாபீன் ஏற்றுமதி கடந்த மாதம் 40,196 டன்னிலிருந்து 87,060 டன்னாகவும், ரேப்சீட் ஏற்றுமதி 98,571 டன்னிலிருந்து 1,69,422 டன்னாகவும் அதிகரித்துள்ளது.

மேம்பட்ட விலையாலும், ஆர்ஜென்டீனாவின் ஏற்றுமதி விநியோகங்களின் பற்றாக்குறை ஆகியவற்றால் இந்திய சோயாபீனுக்கான வெளிநாட்டு தேவை அதிகரித்து, நாம்  பயனடைந்துள்ளோம் என்று சால்வென்ட் எக்ஸ்ட்ராக்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபா் வரையிலான காலகட்டத்தில் எண்ணெய் வகைகளின் மொத்த ஏற்றுமதி 30 சதவிகிதம் உயா்ந்து 25,66,051 டன்னாக உள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் 7 மாதங்களில் சோயாபீன் ஏற்றுமதி 1,61,534 டன்னிலிருந்து 6,73,910 டன்னாக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.