வாரத்தின் முதல் நாளான இன்று (அக். 16) இந்திய பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் முடிவடைந்தது. இதன்மூலம் கடந்த 3 வணிக நாள்களாக பங்குச்சந்தை சரிவுடன் முடிவது குறிப்பிடத்தக்கது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 115.81 புள்ளிகள் சரிந்து 66,166.93 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. இது 0.17 சதவிகிதம் சரிவாகும்.
இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 19.30 புள்ளிகள் சரிந்து 19,731.75 புள்ளிகளாக வணிகம் நிறைவடைந்தது. இது 0.098 சதவிகிதம் சரிவாகும்.
பங்குச்சந்தை குறியீட்டிலுள்ள 30 நிறுவனங்களில் 18 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன. அதிகபட்சமாக டிசிஎஸ் 1.29 சதவிகிதம் சரிந்தது. அதற்கு அடுத்தபடியாக இந்தஸ்ந்த், ஏசியன் பெயிண்ட்ஸ், சன் பார்மா, பார்தி ஏர்டெல், டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிந்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

டென்டா வாட்டர் அண்ட் இன்ஃப்ரா சொல்யூஷன்ஸ் லாபம் 33% சரிவு!

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி சிறப்பு பூஜை
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



