சென்செக்ஸ், நிஃப்டி புதிய உச்சத்தில் நிறைவு!

சர்வதேச சந்தைகளின் ஏற்றம் மற்றும் புதிய அன்னிய மூலதன வரத்து காரணமாக பங்குச்சந்தை குறியீட்டு எண்களான சென்செக்ஸ் மற்றும் நிப்டி இன்றைய வர்த்தகத்தில் புதிய உச்சத்தை தொட்டது.
சென்செக்ஸ், நிஃப்டி புதிய உச்சத்தில் நிறைவு!
Published on
Updated on
1 min read

மும்பை : சர்வதேச சந்தைகளின் ஏற்றம் மற்றும் புதிய அன்னிய மூலதன வரத்து காரணமாக பங்குச் சந்தை குறியீட்டு எண்களான சென்செக்ஸ் மற்றும் நிப்டி இன்றைய வர்த்தகத்தில் புதிய உச்சத்தை தொட்டது.

இது தவிர, டெலிகாம், ஆட்டோ மற்றும் டெக் பங்குகளை வாடிக்கையாளர்கள் வாங்கியதால் சந்தைகள் லாபத்துடன் நிலைபெற்றதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 319.63 புள்ளிகள் உயர்ந்து 67,838.63 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் 89.25 புள்ளிகள் உயர்ந்து 20,192.35 புள்ளிகளாக முடிவடைந்தது.

இன்றைய வர்த்தகத்தில் 119.35 புள்ளிகள் உயர்ந்து அதன் வாழ்நாள் இன்ட்ரா-டே உச்சமான 20,222.45 ஐ எட்டியது.

பார்தி ஏர்டெல் 2.37 சதவிகிதம் உயர்ந்தது, அதைத் தொடர்ந்து மஹிந்திரா & மஹிந்திரா, எச்.சி.எல் டெக், டாடா மோட்டார்ஸ், டெக் மஹிந்திரா, எச்.டி.எஃப்.சி வங்கி, விப்ரோ, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஆக்சிஸ் வங்கி மற்றும் நெஸ்லே ஆகிய பங்குகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

ஏசியன் பெயிண்ட்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், பஜாஜ் ஃபின்சர்வ், என்டிபிசி போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.

ஆசிய சந்தைகளில், சியோல், டோக்கியோ மற்றும் ஹாங்காங் லாபத்துடன் முடிந்தன, ஷாங்காய் இறக்கத்தில் முடிந்தது.

அமெரிக்க சந்தைகள் வியாழக்கிழமை சாதகமான நிலையில் முடிவடைந்தன. அதே வேளையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.294.69 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கினர்.

சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 0.26 சதவிகிதம் உயர்ந்து 93.94 டாலராக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com