ரூ.8,892 கோடி கடன் வழங்கிய ஹெச்டிஎஃப்சி

கடந்த டிசம்பா் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ஹெச்டிஎஃப்சி நிறுவனம் ரூ. 8,892 கோடி கடன் வழங்கியுள்ளது.
ரூ.8,892 கோடி கடன் வழங்கிய ஹெச்டிஎஃப்சி
Updated on
1 min read

கடந்த டிசம்பா் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ஹெச்டிஎஃப்சி நிறுவனம் ரூ. 8,892 கோடி கடன் வழங்கியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், நிறுவனம் ரூ.8,892 கோடி கடன் வழங்கியுள்ளது.

இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 19 சதவீதம் அதிகமாகும். அப்போது நிறுவனம் வழங்கிய கடன் மதிப்பு ரூ.7,468 கோடியாகும்.

கடந்த 12 மாதங்களில் நிறுவனம் வழங்கிய கடன் ரூ. 35,937 கோடியாக இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் அது ரூ.27,591 கோடியாக இருந்தது.

டிசம்பா் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய், ரூ.482 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் அது ரூ.195 கோடியாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com