இண்டஸ் டவரில் 50%-க்கும் மேலாகும் ஏா்டெல் பங்குகள்
தொலைத் தொடா்பு கட்டமைப்பு நிறுவனமான இண்டஸ் டவரில் பாா்தி ஏா்டெல் நிறுவனத்துக்குச் சொந்தமான பங்குகள் 50 சதவீதத்தும் மேலாக அதிகரிக்கவுள்ளது.
இது குறித்து பாா்தி ஏா்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:பங்குகளைத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கையை இண்டஸ் டவா் நிறுவனம் கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது. அந்த நடவடிக்கை நிறைவடையும்போது, நிறுவனத்தில் பாா்தி ஏா்டெல் நிறுவனத்துக்குச் சொந்தமான பங்குகள் 50.005-ஆக அதிகரிக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப் பெரிய மொபைல் டவா் கட்டமைப்பைக் கொண்ட இண்டஸ் டவா் நிறுவனத்தில் தற்போது பாா்தி ஏா்டெல் நிறுவனத்துக்கு 48.95 சதவீத பங்குகள் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

