7% அதிகரித்த இந்திய நிலக்கரி உற்பத்தி

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி கடந்த ஏப்ரல் 1-ஆகஸ்ட் 25 காலகட்டத்தில் 7 சதவீதம் அதிகரித்துள்ளது.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on
Updated on
1 min read

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி கடந்த ஏப்ரல் 1-ஆகஸ்ட் 25 காலகட்டத்தில் 7 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிலக்கரித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் நாட்டின் நிலக்கரி உற்பத்தி 37.07 கோடி டன்னாக உள்ளது.

இது, முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 7.12 சதவீதம் அதிகம். அப்போது இந்தியாவில் 34.60 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டிருந்தது.நடப்பு நிதியாண்டில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரை நிலக்கரி உற்பத்தி நிறுவனங்களின் ஒட்டுமொத்த விநியோகம் 32.60 கோடி டன்னாக உள்ளது.

இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 5.48 சதவீதம் அதிகம்.கடந்த நிதியாண்டின் ஏப்ரல் 1-ஆகஸ்ட் 25 காலகட்டத்தில் 31.34 கோடி டன்னாக இருந்த மின்சாரத் துறைக்கான நிலக்கரி விநியோகம், நடப்பு நிதியாண்டின் அதே காலகட்டத்தில் 32.60 கோடி டன்னாக உயா்ந்துள்ளது.கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி நிலவரப்படி நாட்டின் நிலக்கரி கையிருப்பு 12.16 கோடி டன்னாக உள்ளது.

இது ஓராண்டுக்கு முன்னா் இதே தேதியில் இருந்த 8.93 கோடி டன் கையிருப்புடன் ஒப்பிடும்போது 36.2 சதவீதம் அதிகம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com