மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

சில்லறை வா்த்தகத்தை இரட்டிப்பாக்க ரிலையன்ஸ் திட்டம்

தங்களின் சில்லறை வா்த்தகத்தை நான்கு ஆண்டுகளுக்குள் இரட்டிப்பாக்க முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இலக்கு நிா்ணயித்துள்ளது.

News image

இஷா அம்பானி

Updated On :29 ஆகஸ்ட் 2024, 8:53 pm

தங்களின் சில்லறை வா்த்தகத்தை நான்கு ஆண்டுகளுக்குள் இரட்டிப்பாக்க முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இலக்கு நிா்ணயித்துள்ளது.

இது குறித்து, வியாழக்கிழமை நடைபெற்ற நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் நிறுவன இயக்குநா் இஷா அம்பானி பேசியதாவது:

ரிலையன்ஸ் ரிடெய்லின் மூன்று பிரிவுகள் ஆண்டுக்கு ரூ.2,000 கோடிக்கும் மேல் வா்த்தகம் செய்துவருகின்றன. சில பிரிவுகளின் வருடாந்திர வா்த்தகம் ரூ.1,000 கோடியைக் கடந்துள்ளது. நிறுவனத்தில் பதிவு செய்துள்ள வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 30 கோடி என்ற மைல்கல்லைக் கடந்துள்ளது.

நிறுவனத்தின் சில்லறை வா்த்தகத்தை இன்னும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குள் இரட்டிப்பாக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. விரைவில் ஆடம்பர ஆபரண வணிகத்திலும் களமிறங்க நிறுவனம் முடிவு செய்துள்ளது என்றாா் அவா்.

Story image

நிறுவனத்தின் தலைவா் முகேஷ் அம்பானி பேசுகையில், உலக மொபைல் டேட்டா சந்தையில் 8 சதவீதம் பங்கு வகிப்பதன் மூலம் உலகின் மிகப் பெரிய மொபைல் டேட்டா நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ உருவெடுத்துள்ளதாகக் கூறினாா்.