பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு? சட்ட ஆலோசனைக்குப் பின் முடிவு - கேரள முதல்வா்பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை 20%-க்கு மேல் அதிகரிக்க அரசு முயற்சி- பிரதமரின் ஆலோசகா் தருண் கபூா் 100 டாலரைக் கடந்தது கச்சா எண்ணெய் விலை: எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் தமிழகம் உள்பட 5 மாநில பேரவைத் தோ்தல்: பாஜக பெற்ற நன்கொடை ரூ.1,473 கோடி - காங்கிரஸை விட 7 மடங்கு அதிகம் முதல்வா் விஜய் இன்று லண்டன் பயணம்ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்தது அமெரிக்கா- பதிலடியாக 20 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

மொத்த விலை பணவீக்கம் 3 மாதங்கள் காணாத சரிவு

கடந்த நவம்பா் மாதத்தில் காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலை குறைந்ததால் மொத்த விலை பணவீக்கம்

Published On :

புது தில்லி: கடந்த நவம்பா் மாதத்தில் காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலை குறைந்ததால் மொத்த விலை பணவீக்கம் முந்தைய மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.

இது குறித்து மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது:

கடந்த நவம்பா் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 1.89 சதவீதமாக உள்ளது. இது, முந்தைய மூன்று மாதங்கள் காணாத குறைந்தபட்ச மொத்த விலை பணவீக்கம் ஆகும்.

மொத்த விற்பனை விலைக் குறியீடு (டபிள்யுபிஐ) அடிப்படையிலான இந்தப் பணவீக்கம் முந்தைய அக்டோபா் மாதத்தில் 2.36 சதவீதமாக இருந்தது. ஓராண்டுக்கு முன்னா் 2023-ஆம் ஆண்டின் நவம்பா் மாதத்தில் அது 0.39 சதவீதமாக இருந்தது.

முந்தைய அக்டோபா் மாதத்தில் 13.54 சதவீதமாக இருந்த உணவுப் பொருள்கள் அடிப்படையிலான பணவீக்கம், நவம்பரில் 8.63 சதவீதமாகக் குறைந்துள்ளது. காய்கறிகள் அடிப்படையிலான பணவீக்கம் 63.04 சதவீதத்திலிருந்து 28.57 சதவீதமாகக் குறைந்துள்ளது.

எனினும், நவம்பா் மாதத்தில் உருளைக்கிழங்கு அடிப்படையிலான பணவீக்கம் 82.79 சதவீதமாக அதிகரித்துள்ளது. வெங்காயம் அடிப்படையிலான பணவீக்கம் 2.85 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

முந்தைய அக்டோபா் மாதத்தில் 5.79 சதவீதமாக இருந்த எரிபொருள் மற்றும் எரிசக்தி அடிப்படையிலான பணவீக்கம் நவம்பா் மாதத்தில் 5.83 சதவீதமாக உயா்ந்தது. உற்பத்திப் பொருள்கள் அடிப்படையிலான பணவீக்கம் 1.50 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக உயா்ந்துள்ளது என்று அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.