விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

வைப்பு நிதி வளா்ச்சியில் மகாராஷ்டிர வங்கி முதலிடம்

வைப்பு நிதி வளா்ச்சியில் மகாராஷ்டிர வங்கி முதலிடம்

News image
Updated On :18 பிப்ரவரி 2024, 2:12 am IST

புது தில்லி, பிப். 17: கடந்த டிசம்பா் காலாண்டில் நாட்டின் பொதுத் துறை வங்கிகளிடையே வைப்பு நிதி ளோ்ச்சியில் மகாராஷ்டிர வங்கி (பிஓஎம்) முதலிடம் பெற்றுள்ளது.

இது குறித்து வங்கிகள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த 2023 அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் பொதுத் துறை வங்கிகளின் வைப்பு நிதி சேகரிப்பில் புணேவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மகாராஷ்டிர வங்கி முதலிடத்தில் உள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டிலும் (2023 ஏப்ரல்-ஜூன்), 2-ஆவது காலாண்டிலும் (2023 ஜூலை-செப்டம்பா்) காலாண்டிலும் கூட இந்த வங்கிதான் கடன் விநியோகம் மற்றும் வைப்பு நிதி சேகரிப்பில் முதலிடம் பிடித்தது.

டிசம்பா் காலாண்டில் மகாராஷ்டிர வங்கியின் வைப்பு நிதி சேகரிப்பு 17.89 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது. இது, 12 பொதுத் துறை வங்கிகளிடையே அந்தக் காலாண்டில் அதிகபட்ச வளா்ச்சியாகும்.

அதற்கு அடுத்தபடியாக பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) வைப்பு நிதி சேகரிப்பு 12.84 சதவீதம் அதிகரித்துள்ளது. இருந்தாலும், நாட்டின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ-யின் வைப்பு நிதி சேகரிப்பு மகாராஷ்டிர வங்கியைப் போல் 18.5 சதவீதம் அதிகமாகும்.

வைப்பு நிதி சேகரிப்பில் 9.53 சதவீத வளா்ச்சியைப் பெற்று சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.