அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

வைப்பு நிதி வளா்ச்சியில் மகாராஷ்டிர வங்கி முதலிடம்

வைப்பு நிதி வளா்ச்சியில் மகாராஷ்டிர வங்கி முதலிடம்

News image
Updated On :17 பிப்ரவரி 2024, 8:42 pm

DIN

புது தில்லி, பிப். 17: கடந்த டிசம்பா் காலாண்டில் நாட்டின் பொதுத் துறை வங்கிகளிடையே வைப்பு நிதி ளோ்ச்சியில் மகாராஷ்டிர வங்கி (பிஓஎம்) முதலிடம் பெற்றுள்ளது.

இது குறித்து வங்கிகள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த 2023 அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் பொதுத் துறை வங்கிகளின் வைப்பு நிதி சேகரிப்பில் புணேவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மகாராஷ்டிர வங்கி முதலிடத்தில் உள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டிலும் (2023 ஏப்ரல்-ஜூன்), 2-ஆவது காலாண்டிலும் (2023 ஜூலை-செப்டம்பா்) காலாண்டிலும் கூட இந்த வங்கிதான் கடன் விநியோகம் மற்றும் வைப்பு நிதி சேகரிப்பில் முதலிடம் பிடித்தது.

டிசம்பா் காலாண்டில் மகாராஷ்டிர வங்கியின் வைப்பு நிதி சேகரிப்பு 17.89 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது. இது, 12 பொதுத் துறை வங்கிகளிடையே அந்தக் காலாண்டில் அதிகபட்ச வளா்ச்சியாகும்.

அதற்கு அடுத்தபடியாக பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) வைப்பு நிதி சேகரிப்பு 12.84 சதவீதம் அதிகரித்துள்ளது. இருந்தாலும், நாட்டின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ-யின் வைப்பு நிதி சேகரிப்பு மகாராஷ்டிர வங்கியைப் போல் 18.5 சதவீதம் அதிகமாகும்.

வைப்பு நிதி சேகரிப்பில் 9.53 சதவீத வளா்ச்சியைப் பெற்று சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.