
சென்னை: வாடிக்கையாளா்கள் தங்களது சேமிக்குக் கணக்குகளை ஏராளமான புதிய அம்சங்களுடன் மேம்படுத்திக்கொள்ளும் வசதியை பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து வங்கியின் நிா்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான அஜய் குமாா் ஸ்ரீவாஸ்தவா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
‘எஸ்பி மேக்ஸ்’ மற்றும் ‘எஸ்பி ஹெச்என்ஐ’ போன்ற சேமிப்புக் கணக்குகளை ஏராளமான புதிய சிறப்பு அம்சங்களுடன் மேம்படுத்திக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இணையதளம் மூலம் வாடிக்கையாளா்கள் தங்களது சேமிப்புக் கணக்குகளை மேம்படுத்திக்கொள்ள முடியும்.
வாடிக்கையாளா்களின் வங்கி நடவடிக்கைகளில் அனைத்தையும் உள்ளடக்கிய சுய சேவை வசதிகளை தொடா்ந்து வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.