கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

11,900 பட்டதாரிகளை பணியமர்த்திய இன்போசிஸ்!

கோப்புப் படம்

Published On :

நாட்டின் இரண்டாவது பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் 2024ம் ஆண்டுடன் முடிவடைந்த நிதியாண்டில் சுமார் 11,900 கல்லூரி பட்டதாரிகளை பணியமர்த்தியுள்ளதாக தலைமை நிர்வாக அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான சலில் பரேக் தெரிவித்தார்.

கேம்பஸ் இன்டர்வியூ மூலம் புதியவர்களை தேர்வு செய்வதை ஆண்டுக்காண்டு சரிவைப் பதிவு செய்துள்ள இன்போசிஸ், கடந்த ஆண்டில் 50,000 க்கும் மேற்பட்ட புதிய பட்டதாரிகளை பணியமர்த்தியுள்ளது. 2001ஆம் ஆண்டுக்குப் பிறகு 23 ஆண்டுகளில் முதல் முறையாக இன்போசிஸ் ஊழியர்களின் எண்ணிக்கை 25,994 குறைந்துள்ளது. இந்த நிலையில், இந்த நிதியாண்டில் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை தற்போது 3,17,000 ஆக உள்ளது என்று தெரிவித்துள்ளது.

ஐடி ஊழியர்களின் சங்கமான நாசண்ட் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி எம்ப்ளாயீஸ் செனட் நிறுவனம், இது குறித்து தெரிவிக்கையில், சுமார் 2,000க்கும் மேற்பட்ட கல்லூரி பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்த வந்த நிலையில், தற்போது இன்போசிஸ் தொடர்ந்து தாமதப்படுத்தி வருகிறது என்றது.

இந்த ஆண்டில் சுமார் 11,900 கல்லூரிப் பட்டதாரிகளை நியமித்துள்ளோம். 3,17,000 பணியாளர்களுடன் இந்த பணியமர்த்தலை முடித்துள்ளோம். சுமார் 2,50,000 பணியாளர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன்கள் குறித்து பயிற்சி அளித்துள்ளோம். பாலின பன்முகத்தன்மையில் எங்கள் கவனம் தொடர்ந்து 39 சதவிகிதம் பெண் ஊழியர்களைக் கொண்டுள்ளது என்றார் பரேக்.

எங்கள் பணியமர்த்தல் மாதிரியை கணிசமாக மாற்றியுள்ளோம். இனி வளாகத்திலிருந்து புதியவர்களையும் வேலைக்கு அமர்த்துவதில்லை என்ற நிலையில், அவர்களில் பாதிக்கும் குறைவானவர்களை நாங்கள் வளாகத்திலிருந்தும், அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களை வளாகத்திற்கு வெளியேயும் பணியமர்த்த உள்ளோம் என்றார் தலைமை நிதி அதிகாரி ஜெயேஷ் சங்ராஜ்கா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.