ஊழியர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க பாங்க் ஆப் பரோடா திட்டம்!

பாங்க் ஆப் பரோடா: தொழில்நுட்ப குழு ஊழியர்களின் எண்ணிக்கையை 3000 ஆக உயர்த்த திட்டம்!
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

மும்பை: பொதுத் துறையைச் சேர்ந்த பாங்க் ஆப் பரோடா வங்கியானது் அடுத்த இரண்டு ஆண்டுகளில், தொழில்நுட்ப குழு ஊழியர்களின் எண்ணிக்கையை 3,000 ஆக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது.

குழு தலைமையில் விரைவில் புதிய ஊழியர்களைக் பணியமர்த்தல் செய்ய உள்ளதாகவும், திறமையாளர்களின் பக்கவாட்டில் பணியமர்த்தல் நடைபெறும் என்று அதன் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான தெபாதத்தா சந்த் தெரிவித்தார்.

தற்போது 1,500 ஊழியர்களைத் தவிர, ஐடி செயல்பாட்டில் வங்கியில் ஒப்பந்த ஊழியர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதனால் தகவல் தொழில்நுட்ப பிரிவில் வல்லுநர்களின் வலிமையை கணிசமாக அதிகரிக்கும்.

தொழில்நுட்ப உள்கட்டமைப்பில் சுமார் ரூ.2,000 கோடி முதலீடு் செய்ய போவதாகவும், வரும் காலத்தில் உள்கட்டமைப்பில் அதிக கவனம் செலுத்தப்படும் என்றார்.

2024-25 நிதியாண்டில் 60 புதிய கிளைகளைத் திறக்க வங்கி இலக்கு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com