நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

ஊழியர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க பாங்க் ஆப் பரோடா திட்டம்!

பாங்க் ஆப் பரோடா: தொழில்நுட்ப குழு ஊழியர்களின் எண்ணிக்கையை 3000 ஆக உயர்த்த திட்டம்!

News image

கோப்புப் படம்

Updated On :23 ஜூன் 2024, 11:53 pm IST

மும்பை: பொதுத் துறையைச் சேர்ந்த பாங்க் ஆப் பரோடா வங்கியானது் அடுத்த இரண்டு ஆண்டுகளில், தொழில்நுட்ப குழு ஊழியர்களின் எண்ணிக்கையை 3,000 ஆக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது.

குழு தலைமையில் விரைவில் புதிய ஊழியர்களைக் பணியமர்த்தல் செய்ய உள்ளதாகவும், திறமையாளர்களின் பக்கவாட்டில் பணியமர்த்தல் நடைபெறும் என்று அதன் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான தெபாதத்தா சந்த் தெரிவித்தார்.

தற்போது 1,500 ஊழியர்களைத் தவிர, ஐடி செயல்பாட்டில் வங்கியில் ஒப்பந்த ஊழியர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதனால் தகவல் தொழில்நுட்ப பிரிவில் வல்லுநர்களின் வலிமையை கணிசமாக அதிகரிக்கும்.

தொழில்நுட்ப உள்கட்டமைப்பில் சுமார் ரூ.2,000 கோடி முதலீடு் செய்ய போவதாகவும், வரும் காலத்தில் உள்கட்டமைப்பில் அதிக கவனம் செலுத்தப்படும் என்றார்.

2024-25 நிதியாண்டில் 60 புதிய கிளைகளைத் திறக்க வங்கி இலக்கு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.