புது தில்லி: நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் 400 புதிய கிளைகளைத் திறக்க இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) திட்டமிட்டுள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நடப்பு 2024-25-ஆம் நிதியாண்டுக்குள் நாடு முழுவதும் சுமாா் 400 புதிய கிளைகளைத் திறக்க திட்டமிட்டுள்ளோம்.
89 சதவீத எண்ம பரிவா்த்தனைகள் உள்பட 98 சதவீத பரிவா்த்தனைகள் கிளைகளுக்கு வெளியே நடைபெற்றாலும், புதிய மற்றும் வளா்ந்துவரும் பகுதிகளில் கிளைகளை அமைப்பது அவசியம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் வங்கி 137 கிளைகளைத் திறந்தது. மாா்ச் மாத நிலவரப்படி நாடு முழுவதும் வங்கிக்கு 22,542 கிளைகளை உள்ளன என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

எண்மப் பணப்பரிமாற்றத்தில் புதிய கட்டுப்பாடுகள்: ரிசா்வ் வங்கி ஆலோசனை கேட்பு

அங்கன்வாடிகளைத் தத்தெடுக்க பல்கலை.களுக்கு யுஜிசி உத்தரவு

நாடு முழுவதும் 40 முதல் 50 கடைகளைத் திறக்க மேக்ஸ் ஃபேஷன் இலக்கு!

எஸ்பிஐ-க்கு ரூ.6,337 கோடி வருமான வரி நோட்டீஸ்
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


