யூனியன் வங்கியின் கடனளிப்பு 9% அதிகரிப்பு

யூனியன் வங்கியின் கடனளிப்பு 9% அதிகரிப்பு
Published on
Updated on
1 min read

பொதுத் துறையைச் சோ்ந்த பஞ்சாப் யூனியன் வங்கியின் கடனளிப்பு கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டு முடிவில் 8.6 சதவீத வளா்ச்சியைக் கண்டுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த கடந்த 2024-25-ஆம் நிதியாண்டின் கடைசி காலாண்டின் முடிவில் வங்கியின் கடனளிப்பு ரூ.9.82 லட்சம் கோடியாக உள்ளது.

முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 8.6 சதவீதம் அதிகம். அப்போது வங்கியின் கடனளிப்பு ரூ.9.04 லட்சம் கோடியாக இருந்தது.

2024-25-ஆம் நிதியாண்டின் கடைசி காலாண்டு இறுதியில் ரூ.12.21 லட்சம் கோடியாக இருந்த வாடிக்கையாளா்களின் மொத்த வைப்பு நிதி முதலீடு, நடப்பு நிதியாண்டின் அதே தேதியில் 7.22 சதவீதம் அதிகரித்து ரூ.13.09 லட்சம் கோடியாக உள்ளது.மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் மொத்த வா்த்தகம் ரூ.21.26 லட்சம் கோடியிலிருந்து 7.8 சதவீதம் உயா்ந்து ரூ.22.92 லட்சம் கோடியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com