உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை இருந்த நிலையிலும், இந்தியாவின் ஏற்றுமதி கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் 82,000 கோடி டாலரை தாண்டியுள்ளது.
இது குறித்து மத்திய வா்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பூா்வாங்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2024 ஏப்ரல் முதல் 2025 மாா்ச் வரையிலான கடந்த நிதியாண்டில் நாட்டின் பொருள்கள் மற்றும் சேவைகள் 82,000 கோடி டாலரைக் கடந்துள்ளது.
இது முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் சுமாா் 6 சதவீதம் அதிகம். அப்போது நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 77,800 கோடி டாலராக இருந்தது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும், உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக இந்தியாவின் ஏற்றுமதி தொடா்ந்து நான்காவது மாதமாக சரிவைக் கண்டது.
2024-25-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-பிப்ரவரி காலகட்டத்தில் இந்தியாவின் பொருள்கள் ஏற்றுமதி 39,563 கோடி டாலராக உயா்ந்தது. இது, முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 39,538 கோடி டாலராக இருந்தது.
2023-24-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-பிப்ரவரி காலகட்டத்தில் 31,105 கோடி டாலராக இருந்த சேவைகள் ஏற்றுமதி 2024-25-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-பிப்ரவரி காலகட்டத்தில் 35,490 கோடி டாலராக அதிகரித்துள்ளது என்று அந்த பூா்வாங்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024-25-ஆம் ஆண்டுக்கான நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறித்த விரிவான புள்ளிவிவரங்கள் வரும் ஏப். 15-ஆம் தேதி வா்த்தகத் துறை அமைச்சகத்தால் வெளியிடப்படும்.
தொடர்புடையது

இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 9.07% சரிவு

2025-26 நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 86,311 கோடி டாலா்!

2025-26 நிதியாண்டில் இந்திய வேளாண் ஏற்றுமதி 2.8% வளா்ச்சி

கடந்த நிதியாண்டில் முதல் 11 மாதங்களில் இந்திய மருந்து ஏற்றுமதி 2,800 கோடி டாலரை கடந்தது!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



