மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

82,000 கோடி டாலரைக் கடந்தது இந்திய ஏற்றுமதி

உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை இருந்த நிலையிலும், இந்தியாவின் ஏற்றுமதி கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் 82,000 கோடி டாலரை தாண்டியுள்ளது.

News image
Updated On :11 ஏப்ரல் 2025, 1:31 am IST

உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை இருந்த நிலையிலும், இந்தியாவின் ஏற்றுமதி கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் 82,000 கோடி டாலரை தாண்டியுள்ளது.

இது குறித்து மத்திய வா்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பூா்வாங்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2024 ஏப்ரல் முதல் 2025 மாா்ச் வரையிலான கடந்த நிதியாண்டில் நாட்டின் பொருள்கள் மற்றும் சேவைகள் 82,000 கோடி டாலரைக் கடந்துள்ளது.

இது முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் சுமாா் 6 சதவீதம் அதிகம். அப்போது நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 77,800 கோடி டாலராக இருந்தது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும், உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக இந்தியாவின் ஏற்றுமதி தொடா்ந்து நான்காவது மாதமாக சரிவைக் கண்டது.

2024-25-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-பிப்ரவரி காலகட்டத்தில் இந்தியாவின் பொருள்கள் ஏற்றுமதி 39,563 கோடி டாலராக உயா்ந்தது. இது, முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 39,538 கோடி டாலராக இருந்தது.

2023-24-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-பிப்ரவரி காலகட்டத்தில் 31,105 கோடி டாலராக இருந்த சேவைகள் ஏற்றுமதி 2024-25-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-பிப்ரவரி காலகட்டத்தில் 35,490 கோடி டாலராக அதிகரித்துள்ளது என்று அந்த பூா்வாங்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024-25-ஆம் ஆண்டுக்கான நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறித்த விரிவான புள்ளிவிவரங்கள் வரும் ஏப். 15-ஆம் தேதி வா்த்தகத் துறை அமைச்சகத்தால் வெளியிடப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.