தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

தொடர்ந்து 3வது நாளாக உயர்ந்து முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!

சென்செக்ஸ் 309.40 புள்ளிகள் உயர்ந்து 77,044.29 ஆகவும், நிஃப்டி 108.65 புள்ளிகள் உயர்ந்து 23,437.20 ஆகவும் நிலைபெற்றது.

News image
கோப்புப் படம்
Updated On :16 ஏப்ரல் 2025, 12:53 pm

DIN

மும்பை: அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைக்கு சீனா தயாராக இருப்பதாக வெளியான செய்திகளின் அடிப்படையில் பெஞ்ச்மார்க் குறியீடுகள் இன்று சற்று உயர்ந்து முடிந்தது. நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் முறையே 24,400 மற்றும் 77,000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து முடந்தது.

இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 309.40 புள்ளிகள் உயர்ந்து 77,044.29 ஆகவும், நிஃப்டி 108.65 புள்ளிகள் உயர்ந்து 23,437.20 ஆகவும் நிலைபெற்றது.

பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.5 சதவிகிதமும், ஸ்மால்கேப் குறியீடு கிட்டத்தட்ட 1 சதவிகிதமும் உயர்ந்து. ஊடகங்கள், பொதுத்துறை வங்கி, எண்ணெய் மற்றும் எரிவாயு துறை 1 முதல் 2 சதவிகிதம் வரை உயர்ந்தது முடிந்தது.

சீனாவிற்கான என்விடியா கார்ப்பரேஷனின் சிப் ஏற்றுமதிக்கு டிரம்ப் நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் தொழில்நுட்ப பங்குகள் சரிவுக்கு இது வெகுவாக வழிவகுத்தது.

ஐரோப்பிய குறியீடுகள் இன்று ஏற்ற-இறக்கத்தோடு வர்த்தகமானது. ஆசிய சந்தை கலவையான குறிப்பில் முடிவடைந்தது. தைவான் சரிந்த நிலையில் ஹேங் செங் தலா 2 சதவிகிதம் சரிந்தது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 0.5 சதவிகிதம் உயர்ந்தது முடிந்தது.

நிஃப்டியில் மாருதி சுசூகி, ஹிண்டால்கோ, பஜாஜ் பைனான்ஸ், எல் அண்ட் டி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்து முடிந்து. இண்டஸ்இண்ட் வங்கி, ஆக்ஸிஸ் பேங்க், டிரென்ட், ஓஎன்ஜிசி, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து முடிந்தது.

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நான்காவது காலாண்டு லாபம் 122 சதவிகிதம் உயர்ந்ததால், 3 சதவிகிதம் உயர்ந்து முடிந்தது. ஒருங்கிணைந்த லாபம் 48 சதவிகிதம் உயர்ந்ததால் ஐஆர்இடிஏ பங்குகள் 5 சதவிகிதம் உயர்ந்த நிலையில் இண்டஸ்இண்ட் வங்கி பங்குகள் 7 சதவிகிதம் வரை உயர்ந்து முடிந்தது.

மத்திய அரசு முன்னுரிமை அடிப்படையில் எரிவாயு ஒதுக்கீட்டை குறைத்ததையடுத்து மகாநகர் எரிவாயு பங்குகள் 5 சதவிகிதம் சரிந்து முடிந்தது.

நாராயணா ஹிருதயாலயா, ஈச்சர் மோட்டார்ஸ், பார்தி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி வங்கி, எஸ்பிஐ கார்டுஸ், ஸ்ரீ சிமெண்ட்ஸ், சம்பல் பெர்டிலைசர்ஸ், அஸ்ட்ராஜெனெகா பார்மா உள்ளிட்ட 80 பங்குகள் 52 வார உயர்வை பதிவு செய்தது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) ரூ.6,065.78 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.91 சதவீதம் உயர்ந்து பீப்பாய்க்கு 65.22 டாலராக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.