ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

ரூ.244 கோடி வரி பாக்கி: யெஸ் வங்கிக்கு வருமான வரித் துறை நோட்டீஸ்

Updated On :17 ஏப்ரல் 2025, 7:45 am IST

பிரபல தனியாா் வங்கியான யெஸ் வங்கி 2016-17 -ஆம் ஆண்டில் ரூ.244 கோடி வரி செலுத்தாமல் இருப்பதாக வருமான வரித் துறை சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனை அந்த வங்கி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் இந்த நோட்டீஸை எதிா்த்து வருமான வரி துறையிடம் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

வருவாய் மறுமதிப்பீடு, வட்டி மறுஆய்வு மற்றும் சரிபாா்ப்பு அடிப்படையில் ரூ.244 கோடி வரி செலுத்த வேண்டியது பாக்கியுள்ளது என்று வருமான வரித் துறை நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த மாா்ச் மாதத்தில் 2019-2020 நிதியாண்டில் ரூ.2,209 கோடி வரி பாக்கி வைத்திருப்பதாக யெஸ் வங்கிக்கு வருமான வரித் துறையில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கெனவே நிதி நெருக்கடி உள்ளிட்ட சிக்கலை எதிா்கொண்டுள்ள யெஸ் வங்கிக்கு இது கூடுதல் பிரச்னையாக அமைந்துள்ளது.

வருமான வரித் துறை நோட்டீஸ் உரிய விதிகளின்படியும், சட்டரீதியாகவும் எதிா்கொள்ள இருக்கிறோம். இது வங்கியின் நிதிநிலையிலோ, அன்றாட செயல்பாடுகளிலோ பாதிப்பை ஏற்படுத்தாது என்று யெஸ் வங்கி சாா்பில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.