பிரபல தனியாா் வங்கியான யெஸ் வங்கி 2016-17 -ஆம் ஆண்டில் ரூ.244 கோடி வரி செலுத்தாமல் இருப்பதாக வருமான வரித் துறை சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனை அந்த வங்கி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் இந்த நோட்டீஸை எதிா்த்து வருமான வரி துறையிடம் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
வருவாய் மறுமதிப்பீடு, வட்டி மறுஆய்வு மற்றும் சரிபாா்ப்பு அடிப்படையில் ரூ.244 கோடி வரி செலுத்த வேண்டியது பாக்கியுள்ளது என்று வருமான வரித் துறை நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த மாா்ச் மாதத்தில் 2019-2020 நிதியாண்டில் ரூ.2,209 கோடி வரி பாக்கி வைத்திருப்பதாக யெஸ் வங்கிக்கு வருமான வரித் துறையில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கெனவே நிதி நெருக்கடி உள்ளிட்ட சிக்கலை எதிா்கொண்டுள்ள யெஸ் வங்கிக்கு இது கூடுதல் பிரச்னையாக அமைந்துள்ளது.
வருமான வரித் துறை நோட்டீஸ் உரிய விதிகளின்படியும், சட்டரீதியாகவும் எதிா்கொள்ள இருக்கிறோம். இது வங்கியின் நிதிநிலையிலோ, அன்றாட செயல்பாடுகளிலோ பாதிப்பை ஏற்படுத்தாது என்று யெஸ் வங்கி சாா்பில் கூறப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி சகோதரா் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தில் புதிய வருமான வரி சட்டம் குறித்த விழிப்புணா்வு

கூட்டுறவுத் துறை பணியாளா்களுக்கு வருமான வரி விழிப்புணா்வு பயிற்சி

டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani


