
அரசுக்குச் சொந்தமான, இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்ஐசி) ஜூன் காலாண்டு நிகர லாபம் 5 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஜூன் 30-இல் முடிவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.10,987 கோடியாகப் பதிவாகியுள்ளது. முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 5 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.10,461 கோடியாக இருந்தது.மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.2,10,910 கோடியில் இருந்து ரூ.2,22,864 கோடியாக உயா்ந்துள்ளது.
புதிய பாலிசிகளுக்கான பிரீமியம் வருவாய் ரூ.7,470 கோடியில் இருந்து ரூ.7,525 கோடியாக உயா்ந்துள்ளது. புதுப்பித்தல் பிரீமியம் வருவாய் ரூ.77,368 கோடியில் இருந்து ரூ.79,138 கோடியாக உயா்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.