இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தில்லி-வாஷிங்டனுக்கான விமான சேவையை நிறுத்துவதாக ஏர் இந்தியா அறிவிப்பு!

ஏர் இந்தியா நிறுவனம் செப்டம்பர் 1 முதல் புதுதில்லி மற்றும் வாஷிங்டன் இடையேயான விமான சேவையை நிறுத்துவதாக இன்று அறிவித்துள்ளது.

News image
ஏர் இந்தியா
Updated On :11 ஆகஸ்ட் 2025, 2:51 pm

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: ஏர் இந்தியா நிறுவனம் செப்டம்பர் 1 முதல் புதுதில்லி மற்றும் வாஷிங்டன் இடையேயான விமான சேவையை நிறுத்துவதாக இன்று அறிவித்துள்ளது.

இந்த மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் பல போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்கள் இடைநிறுத்தத்திற்கான முதன்மைக் காரணம் பற்றாக்குறையே என்றது. மேலும் இந்த மேம்படுத்தல், 2026ஆம் ஆண்டு பிற்பகுதி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறதாக தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் அதன் போயிங் 787-8 ரக 26 விமானங்களை மறுசீரமைப்பு செய்யத் தொடங்கிய ஏர் இந்தியா, இந்த மறுசீரமைப்பு திட்டமானது வாடிக்கையாளரின் அனுபவத்தை கணிசமாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என்றது.

பாகிஸ்தான் வான்வெளி தொடர்ந்து மூடப்படுவதால் ஏர் இந்தியா நீண்ட விமானப் பாதைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நீண்ட தூர விமான வழித்தடங்கள் மற்றும் செயல்பாடுகள் சிக்கலான தன்மை அதிகரிக்கும் என்றது.

இந்த இடைநிறுத்தம் செயல்பாட்டு காரணிகளின் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டாலும், செப்டம்பர் 1 ஆம் தேதிக்குப் பிறகு வாஷிங்டனுக்கு முன்பதிவு செய்த பயணிகளைத் தொடர்பு கொண்டு, அவர்களின் விருப்பங்களின்படி, மற்ற விமானங்களில் மறு முன்பதிவு செய்தல் அல்லது முழு தொகையும் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட மாற்று பயண ஏற்பாடுகள் வழங்கப்படும் என்றது ஏர் இந்தியா.

summary

Air India on Monday said it will suspend flights between the national capital and Washington D.C. from September 1.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.