வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

ஹிண்ட் ரெக்டிஃபையர்ஸ் லாபம் 85% உயர்வு!

ஜூன் வரையான காலாண்டில் வரிக்குப் பிந்தைய லாபம் 85.5 சதவிகிதம் உயர்ந்து ரூ.12.8 கோடியாக உள்ளதாக அறிவித்துள்ளது நிறுவனம்.

News image
Updated On :15 ஆகஸ்ட் 2025, 10:09 pm IST

புதுதில்லி: முன்னணி மின்சார மின்னணு உபகரணங்கள் மற்றும் ரயில் போக்குவரத்து உபகரண உற்பத்தியாளரான ஹிண்ட் ரெக்டிஃபையர்ஸ், அதிக ஆர்டர் பெற்றதன் பெயரிலும், அதன் செயல்பாட்டுத் திறன் காரணமாகவும் 2025-26 ஜூன் வரையான காலாண்டில் வரிக்குப் பிந்தைய லாபமாக 85.5% உயர்ந்து ரூ.12.8 கோடியாக உள்ளதாக அறிவித்துள்ளது.

ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் செயல்பாடுகளிலிருந்து கிடைக்கும் வருவாய் 58.5 சதவிகிதம் உயர்ந்து ரூ.214.8 கோடியாக உள்ளது. இதுவே 2025ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இது ரூ.135.5 கோடியாக இருந்தது.

இந்திய ரயில்வே இடமிருந்து இந்த காலாண்டில் ரூ.327 கோடி மதிப்புள்ள ஆர்டர்கள் பெற்றதன் மூலம், எங்கள் ஆர்டர் புத்தகம் ரூ.1,025 கோடியை எட்டியது. அதே வேளையில் லோகோமோட்டிவ் தயாரிப்புகளுக்காக இந்திய ரயில்வேயிடமிருந்து ரூ.127 கோடி மற்றும் ரூ.101 கோடி மதிப்புள்ள இரண்டு ஆர்டர்களையும் பெற்றுள்ளோம்.

நிறுவனத்தின் பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உள்பட, தற்போதுள்ள குழுவிற்கு ரூ.27.4 கோடி மதிப்புள்ள முன்னுரிமை வாரண்டுகளை வழங்க இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.