வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஐபோன் 17 தயாரிப்பு இந்தியாவில் தொடக்கம்!

பெங்களூரு ஃபாக்ஸ்கான் ஆலையில் ஆப்பிள் ஐபோன் 17 ஸ்மார்ட்போன் தயாரிப்புப் பணிகள் தொடங்கியுள்ளன.

News image

ஆப்பிள் - கோப்புப் படம்

Updated On :18 ஆகஸ்ட் 2025, 11:58 am

இந்தியாவில் ஐபோன் 17 தயாரிப்புப் பணிகள் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் ஐபோன் உதிரி பாகங்களைத் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் ஆலையில் ஆப்பிள் ஐபோன் 17 ஸ்மார்ட்போன் தயாரிப்புப் பணிகள் தொடங்கியுள்ளன.

மின்னணு சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐபோன் 17, செப்டம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தயாரிப்புப் பணிகள் இந்தியாவில் தொடங்கியுள்ளன.

அமெரிக்காவுக்குச் சொந்தமான ஆப்பிள் நிறுவனம், ஐபோன் 17, ஐபோன் 17 ஏர், ஐபோன் 17 ப்ரோ, மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய நான்கு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது.

பெங்களூருவில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் இதற்கான தயாரிப்புப் பணிகள் தொடங்கியுள்ளன. ஆப்பிள் நிறுவனத்துக்கு உலகில் மிகப்பெரிய தயாரிப்பு வசதி உடைய இரண்டாவது ஆலை இதுவாகும். முதலிடத்தில் சீனா உள்ளது.

ஆங்கில ஊடகமான சி.என்.பி.சி. தகவலின்படி, சென்னை அருகேவுள்ள ஃபாக்ஸ்கான் ஆலையிலும் ஐபோன் தயாரிப்புப் பணிகள் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.

2025 மார்ச் மாத நிதியாண்டின்படி, இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ஐபோன் தயாரிப்பு மதிப்பு 22 மில்லியன் டாலர்கள். 2026 நிதியாண்டில் இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2025 ஜூன் மாதம் அமெரிக்காவில் விற்பனையான ஐபோன்களில் பெரும்பான்மையானவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டவையே என ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் புதிய வரி விதிப்பானது, ஃபாக்ஸ்கான் தயாரிப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

எனினும், ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து ஐபோன்களை இந்தியாவில் தயாரித்து உலக சந்தைக்கு எடுத்துச் செல்கிறது. டிரம்ப் வரி விதிப்பு அமலுக்குப் பிறகு, இந்தியாவில் உற்பத்தியான ஐபோன்களுக்கு அமெரிக்காவில் கூடுதல் விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

இந்தியாவில் இருந்து செய்யப்படும் இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பதாக டிரம்ப் அரசு அறிவித்துள்ளது. எனினும், ஆப்பிள் நிறுவனம், ஐபோன் தயாரிப்புகளை இந்தியாவில் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

iPhone 17 Production in India Goes Live

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.