பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு? சட்ட ஆலோசனைக்குப் பின் முடிவு - கேரள முதல்வா்பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை 20%-க்கு மேல் அதிகரிக்க அரசு முயற்சி- பிரதமரின் ஆலோசகா் தருண் கபூா் 100 டாலரைக் கடந்தது கச்சா எண்ணெய் விலை: எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் தமிழகம் உள்பட 5 மாநில பேரவைத் தோ்தல்: பாஜக பெற்ற நன்கொடை ரூ.1,473 கோடி - காங்கிரஸை விட 7 மடங்கு அதிகம் முதல்வா் விஜய் இன்று லண்டன் பயணம்ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்தது அமெரிக்கா- பதிலடியாக 20 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

ரூ. 76,000 -ஐ நெருங்கும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...

கோப்புப்படம்

Published On :

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து நான்காவது நாளாக வெள்ளிக்கிழமையும் அதிகரித்துள்ளது.

வரலாற்றில் இரண்டாவது முறையாக ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 75,760 -க்கு விற்கப்படுகிறது. இதற்கு முன்னதாக கடந்த ஆக. 8 ஆம் தேதி புதிய உச்சமாக இதே விலையில் விற்பனையானது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை ஒரு சவரனுக்கு ரூ. 520 உயர்ந்து ரூ. 75,760 -க்கும் ஒரு கிராம் ரூ.  9,470 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை மூன்று நாள்களுக்கு பிறகு கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி ஒரு கிராம் ரூ. 131 -க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,31,000 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நில நாள்களாகவே ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

ஓணம் பண்டிகை காலத்தையொட்டி, கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தங்கத்தின் விலை தொடர் ஏற்றம் கண்டு வருகின்றது. செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ. 400, புதன்கிழமை கிராமுக்கு ரூ. 280, வியாழக்கிழமை கிராமுக்கு ரூ. 120 அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

Summary

The price of gold jewelry in Chennai increased for the fourth consecutive day on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.