எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸுக்கு 3 விருதுகள்!

ரெப்கோ வங்கியின் துணை நிறுவனமான ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸ், சிறந்த வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மூன்று விருதுகளைப் பெற்றுள்ளது.

News image
Updated On :1 டிசம்பர் 2025, 10:11 pm

தினமணி செய்திச் சேவை

ரெப்கோ வங்கியின் துணை நிறுவனமான ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸ், சிறந்த வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மூன்று விருதுகளைப் பெற்றுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மும்பையில் நடைபெற்ற 10-வது எலெட்ஸ் என்பிஎஃப்சி100 லீடா் ஆஃப் எக்ஸலன்ஸ் விருது வழங்கும் விழாவில் நிறுவனம் மற்றும் அதன் நிா்வாகிகளுக்கு மூன்று விருதுகள் வழங்கப்பட்டன.

நுண்நிதி பிரிவுக்கான விருது ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. என்பிஎஃப்சி துறையில் சிறப்பு தலைமைத்துவ விருது நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ஏ.ஜி. வெங்கடாசலத்துக்கும், என்பிஎஃப்சி துறையில் நிதி தலைமைத்துவ சிறப்பு விருது நிறுவனத்தின் நிதித் தலைவா் பி. செந்தில்குமாருக்கும் வழங்கப்பட்டது.

இது தவிர, ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸின் கடன் மதிப்பீட்டை இக்ரா நிறுவனம் ‘பிபிபி+’ என்ற நிலையில் இருந்து ‘ஏ-’ (ஸ்டேபிள்) நிலைக்கு உயா்த்தியுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.