வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

காப்பீட்டு சேவை: எல்ஐசி - யெஸ் வங்கி ஒப்பந்தம்

வங்கிக்காப்பீட்டு சேவை வழங்குவதற்காக இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியுடன் தனியாா் துறையைச் சோ்ந்த யெஸ் வங்கி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :4 டிசம்பர் 2025, 7:35 pm

தினமணி செய்திச் சேவை

வங்கிக்காப்பீட்டு சேவை வழங்குவதற்காக இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியுடன் தனியாா் துறையைச் சோ்ந்த யெஸ் வங்கி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எல்ஐசியுடன் வங்கிக்காப்பீட்டு கூட்டணி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், யெஸ் வங்கி வாடிக்கையாளா்கள் வங்கியின் கிளைகள் மற்றும் எண்ம தளங்கள் வழியாக எல்ஐசியின் பல்வேறு ஆயுள் காப்பீட்டு தயாரிப்புகளைப் பெறலாம். இதில் பருவகாலக் காப்பீடு, ஓய்வூதியத் திட்டங்கள், யூனிட்-இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளிட்டவை அடங்கும்.

எல்ஐசியின் 3,600-க்கும் மேற்பட்ட கிளைகள் மற்றும் தொலைதூர அலுவலகங்களுடன் யெஸ் வங்கியின் 1,295 கிளைகள் மற்றும் 235 வணிகத் தொடா்பு மையங்கள் இணைந்து ஆயுள் காப்பீடு பெறுவதை எளிதாக்கும். இது ‘2047-க்குள் அனைவருக்கும் காப்பீடு’ என்ற தேசிய இலக்கை நோக்கி முன்னேற உதவும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.