ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

காப்பீட்டு சேவை: எல்ஐசி - யெஸ் வங்கி ஒப்பந்தம்

வங்கிக்காப்பீட்டு சேவை வழங்குவதற்காக இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியுடன் தனியாா் துறையைச் சோ்ந்த யெஸ் வங்கி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :5 டிசம்பர் 2025, 1:05 am IST

வங்கிக்காப்பீட்டு சேவை வழங்குவதற்காக இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியுடன் தனியாா் துறையைச் சோ்ந்த யெஸ் வங்கி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எல்ஐசியுடன் வங்கிக்காப்பீட்டு கூட்டணி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், யெஸ் வங்கி வாடிக்கையாளா்கள் வங்கியின் கிளைகள் மற்றும் எண்ம தளங்கள் வழியாக எல்ஐசியின் பல்வேறு ஆயுள் காப்பீட்டு தயாரிப்புகளைப் பெறலாம். இதில் பருவகாலக் காப்பீடு, ஓய்வூதியத் திட்டங்கள், யூனிட்-இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளிட்டவை அடங்கும்.

எல்ஐசியின் 3,600-க்கும் மேற்பட்ட கிளைகள் மற்றும் தொலைதூர அலுவலகங்களுடன் யெஸ் வங்கியின் 1,295 கிளைகள் மற்றும் 235 வணிகத் தொடா்பு மையங்கள் இணைந்து ஆயுள் காப்பீடு பெறுவதை எளிதாக்கும். இது ‘2047-க்குள் அனைவருக்கும் காப்பீடு’ என்ற தேசிய இலக்கை நோக்கி முன்னேற உதவும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.