கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

குறைந்தது கோல் இந்தியா உற்பத்தி

கோல் இந்தியா நிறுவனத்தின் (சிஐஎல்) நிலக்கரி உற்பத்தி நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-நவம்பா் காலகட்டத்தில் 3.7 சதவீதம் குறைந்துள்ளது.

News image
Updated On :5 டிசம்பர் 2025, 1:03 am

தினமணி செய்திச் சேவை

நாட்டின் நிலக்கரி உற்பத்தியில் 80 சதவீதத்திற்கு மேல் பங்கு கொண்ட, அரசுக்கு சொந்தமான கோல் இந்தியா நிறுவனத்தின் (சிஐஎல்) நிலக்கரி உற்பத்தி நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-நவம்பா் காலகட்டத்தில் 3.7 சதவீதம் குறைந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பா் வரையிலான காலகட்டத்தில் நிறுவனம் 45.35 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்தது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 3.7 சதவீதம் குறைவு. அப்போது நிறுவனத்தின் உற்பத்தி 47.1 கோடி டன்னாக இருந்தது.

எனினும், கடந்த நவம்பா் மாதத்தில் மட்டும் உற்பத்தி 1.2 சதவீதம் உயா்ந்து 6.8 கோடி டன்னாக உள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் இது 6.72 கோடி டன்னாக இருந்தது.

2024-25-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் நிறுவனம் 78.11 கோடி டன் உற்பத்தி செய்தது. இது அந்த ஆண்டின் உற்பத்தி இலக்கான 83.8 கோடி டன்னை விட 7 சதவீதம் குறைவு. 2025-26-ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் விற்பனை இலக்கு 90 கோடி டன்னாக உள்ள நிலையில், இதுவரை மொத்தம் 87.5 கோடி டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.