தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

கையடக்கக் கணினி ஏற்றுமதி 20% சரிவு! காரணம் என்ன?

நாட்டில் கையடக்கக் கணினி சந்தை சரிவுக்கான காரணங்கள் குறித்து...

News image

கோப்புப் படம்

Updated On :8 டிசம்பர் 2025, 5:48 pm IST

2025 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் நாட்டின் கையடக்கக் கணினி (டேப்லெட்) ஏற்றுமதி சந்தை 20 சதவிகிதம் வரை சரிந்துள்ளது.

இந்த காலகட்டத்தில் 1.33 மில்லியன் கையடக்கக் கணினிகள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக சர்வதேச தரவுக் கழகம் வழங்கியுள்ள அறிக்கையில், சாதாரண கையடக்கக் கணினி மற்றும் வணிக கையடக்கக் கணினிக்கான தேவை குறைந்துள்ளதே இந்த சரிவுக்கு காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கையடக்கக் கணினியின் ஒட்டுமொத்த ஏற்றுமதி சரிந்துள்ளதே தவிர, நுகர்வோர் பிரிவில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டில், 13.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

இவை பெரும்பாலும் விழாக் கால சலுகைகள், கேஷ்பேக் மற்றும் பல்வேறு விதமான சலுகை விளம்பரங்களின் மூலம் கிடைத்துள்ளன.

இத்துடன் இணைய விற்பனை தளங்களும் முக்கியப் பங்காற்றுகின்றன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 53.9 சதவிகித விற்பனை இணையத்தில் நடந்துள்ளது.

குறிப்பாக தட்டச்சு கருவியில் இருந்து தனியாக எடுத்து பேனா மூலம் பயன்படுத்தும் வகையிலான கையடக்கக் கணினியின் பயன்பாட்டை மக்கள் சமீபகாலமாக அதிகம் விரும்புவதாகவும், இவை அனைத்துமே நுகர்வோர் பிரிவில் விற்பனை அதிகரித்ததற்கான காரணம் எனவும் சர்வதேச தரவுக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு நேர்மாறாக கல்வித் துறையில் வணிக கையடக்கக் கணினியின் பயன்பாடு 53 சதவிகிதமாக சரிந்துள்ளது. பள்ளி பயன்பாட்டிற்காக வாங்கப்படும் கையடக்கக் கணினியும் 61.9 சதவிகிதம் சரிந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.