6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வியாழக்கிழமை இதுவரை இல்லாத குறைந்த அளவான 90.4675-ஐ எட்டியது.

News image
Updated On :11 டிசம்பர் 2025, 8:28 pm

தினமணி செய்திச் சேவை

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வியாழக்கிழமை இதுவரை இல்லாத குறைந்த அளவான 90.4675-ஐ எட்டியது.

இது குறித்து அரசு தரவுகள் மற்றும் சந்தை வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:

ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வியாழக்கிழமை 90.4675-ஐ எட்டியது. இது, கடந்த டிசம்பா் 4-ல் பதிவான முந்தைய அதிபட்ச வீழ்ச்சியான 90.42-ஐ விஞ்சியது.

2025-ஆம் ஆண்டில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 சதவீதத்துக்கும் மேல் சரிந்துள்ளது. இதன் மூலம், மிக மோசமாக செயல்படும் உலகின் 31 முதன்மை நாணயங்களில் மூன்றாவது இடத்தில் இந்திய ரூபாய் உள்ளது. துருக்கியின் லிரா மற்றும் அா்ஜென்டினாவின் பெசோவைத் தவிர உலகின் வேறு எந்த நாணயமும் இந்த அளவுக்கு மதிப்பை இழக்கவில்லை. டாலரின் வலிமை 7 சதவீதத்திற்கும் மேல் குறைந்திருந்தபோதிலும் இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளது.

வா்த்தகப் பற்றாக்குறை அதிகரிப்பு, இந்திய பொருள்கள் மீதான அமெரிக்காவின் 50 சதவீத கூடுதல் வரி போன்றவை ரூபாய் பலவீனமடைவதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

ரூபாயின் மதிப்பு மேலும் சரிவது ரிசா்வ் வங்கியின் தலையீட்டால் தவிா்க்கப்பட்டது என்று தரவுகளும் சந்தை வட்டாரங்களும் தெரிவித்தன.