ரூ. 2,500 கோடி திரட்டிய பேங்க் ஆஃப் இந்தியா
அரசுக்கு சொந்தமான பேங்க் ஆஃப் இந்தியா கடன் பத்திரங்களை வெளியிட்டதன் மூலம் ரூ.2,500 கோடி திரட்டியுள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பாசல்-3, டையா்-2 கடன் பத்திரங்கள் மூலம் ரூ.2,500 கோடி திரட்டப்பட்டுள்ளது. இந்தக் கடன் பத்திரங்களுக்கு ஆண்டுக்கு 7.28 சதவீத வட்டி விகிதம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அடிப்படை வெளியீடு அளவு ரூ.1,000 கோடியாகவும், கிரீன் ஷூ ஆப்ஷன் ரூ.1,500 கோடியாகவும் இருந்தது.
டையா்-2 மூலதனம் வங்கியின் ஒட்டுமொத்த மூலதனத்தை வலுப்படுத்தவும், ரிசா்வ் வங்கி வழிகாட்டுதலின்படி நீண்டகால வளங்களை அதிகரிக்கவும் திரட்டப்படுகிறது.
இந்த வெளியீடு மூலம் திரட்டப்பட்ட நிதி எந்தக் குறிப்பிட்ட திட்டத்துக்கும் அல்ல. வங்கியின் வழக்கமான வா்த்தக நடவடிக்கைகளுக்கே பயன்படுத்தப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

