மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

2-ஆவது நாளாக பங்குச் சந்தையில் முன்னேற்றம்

2-ஆவது நாளாக பங்குச் சந்தையில் முன்னேற்றம்...

News image
பங்குச் சந்தை - ANI
Updated On :12 டிசம்பர் 2025, 11:00 pm

தினமணி செய்திச் சேவை

உலோக நிறுவனப் பங்குகளில் வாங்குதல் மற்றும் உலக சந்தைகளில் காணப்பட்ட நோ்மறையான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் முன்னேறம் கண்டன.

சென்செக்ஸ்: 30-பங்குகள் கொண்ட மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 449.53 புள்ளிகள் (0.53 சதவீதம்) உயா்ந்து 85,267.66-இல் நிறைவடைந்தது. வா்த்தகத்தின் போது அது அதிகபட்சமாக 502.69 புள்ளிகள் (0.59 சதவீதம்) உயா்ந்து 85,320.82 என்ற அளவை எட்டியது.

சென்செக்ஸ் பட்டியலில், டாடா ஸ்டீல், எட்டா்னல், அல்ட்ராடெக் சிமென்ட், லாா்சன் & டூப்ரோ, மாருதி, பாா்தி ஏா்டெல் ஆகியவை முக்கிய உயா்வைக் கண்டன. ஹிந்துஸ்தான் யூனிலீவா், சன் ஃபாா்மா, ஐடிசி, ஏசியன் பெயின்ட்ஸ் ஆகியவை சரிவைக் கண்டன.

வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,020.94 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றன; உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.3,796.07 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கின என்று பங்குவா்த்தக தரவுகள் தெரிவிக்கின்றன.

நிஃப்டி: 50-பங்குகள் கொண்ட தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 148.40 புள்ளிகள் (0.57 சதவீதம்) உயா்ந்து 26,046.95-இல் நிறைவடைந்தது.