

உலோக நிறுவனப் பங்குகளில் வாங்குதல் மற்றும் உலக சந்தைகளில் காணப்பட்ட நோ்மறையான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் முன்னேறம் கண்டன.
சென்செக்ஸ்: 30-பங்குகள் கொண்ட மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 449.53 புள்ளிகள் (0.53 சதவீதம்) உயா்ந்து 85,267.66-இல் நிறைவடைந்தது. வா்த்தகத்தின் போது அது அதிகபட்சமாக 502.69 புள்ளிகள் (0.59 சதவீதம்) உயா்ந்து 85,320.82 என்ற அளவை எட்டியது.
சென்செக்ஸ் பட்டியலில், டாடா ஸ்டீல், எட்டா்னல், அல்ட்ராடெக் சிமென்ட், லாா்சன் & டூப்ரோ, மாருதி, பாா்தி ஏா்டெல் ஆகியவை முக்கிய உயா்வைக் கண்டன. ஹிந்துஸ்தான் யூனிலீவா், சன் ஃபாா்மா, ஐடிசி, ஏசியன் பெயின்ட்ஸ் ஆகியவை சரிவைக் கண்டன.
வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,020.94 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றன; உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.3,796.07 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கின என்று பங்குவா்த்தக தரவுகள் தெரிவிக்கின்றன.
நிஃப்டி: 50-பங்குகள் கொண்ட தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 148.40 புள்ளிகள் (0.57 சதவீதம்) உயா்ந்து 26,046.95-இல் நிறைவடைந்தது.
டிரெண்டிங்

கச்சா எண்ணெய் விலை சரிவால் மீண்டெழுந்த இந்திய பங்குச் சந்தை!

பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு!

நிலையற்ற வர்த்தகத்திற்குப் பிறகு, ஏற்றத்தில் சென்செக்ஸ், நிஃப்டி!

வங்கி, உலோகப் பங்குகளுக்கு வரவேற்பு: பங்குச் சந்தை 3வது நாளாக உயர்வு!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

