விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

மொத்த விலை பணவீக்கம் நவம்பரில் இரண்டாவது மாதமாக எதிர்மறையாகப் பதிவாகியுள்ளது.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 4:20 am IST

புது தில்லி: மொத்த விலை பணவீக்கம் நவம்பரில் இரண்டாவது மாதமாக எதிர்மறையாகப் பதிவாகியுள்ளது. இது குறித்து தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த நவம்பரில் நாட்டின் மொத்த விலை பணவீக்கம் -0.32 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. அது அக்டோபரில் -1.21

சதவீதமாகவும், கடந்த ஆண்டு நவம்பரில் 2.16 சதவீதமாகவும் இருந்தது.

உணவுப் பொருள்கள், கனிம எண்ணெய்கள், கச்சா பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு, அடிப்படை உலோகங்கள் உற்பத்தி, மின்சாரம் ஆகியவற்றின் மொத்த விலை குறைந்தது நவம்பரில் எதிர்மறை பணவீக்கத்துக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

உணவுப் பொருள்களில் ஏப்ரல் முதல் தொடர்ந்து 8 மாதங்களாக எதிர்மறை பணவீக்கம் உள்ளது. நவம்பரில் -4.16 சதவீதமாகக் குறைந்த அது, முந்தைய அக்டோபரில் -8.31 சதவீதமாக இருந்தது. காய்கறிகளில் -20.23 சதவிகிதம், பயறு வகைகளில் -15.21 சதவிகிதம், உருளைக்கிழங்கில் -36.14 சதவிகிதம், வெங்காயத்தில் -64.70 சதவிகிதம் எதிர்மறை பணவீக்கம் உள்ளது.

அக்டோபரில் 1.54 சதவீதமாக இருந்த உற்பத்தி பொருள்களுக்கான பணவீக்கம் நவம்பரில் 1.33 சதவீதமாகக் குறைந்தது. எரிபொருள் மற்றும்

மின்சாரத்தில் எதிர்மறை பணவீக்கம் அக்டோபரில் -2.55 சதவீதமாக இருந்து, நவம்பரில் -2.27 சதவீதமாகப் பதிவானது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.