நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ரூ.3,300 கோடி திரட்டிய வோடஃபோன் ஐடியா

கடன் சுமையில் சிக்கியுள்ள நாட்டின் முன்னணி தொலைத் தொடா்பு நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் ஐடியாவின் துணை நிறுவனமான வோடஃபோன் ஐடியா டெலிகாம் இன்ஃப்ராஸ்ட்ரக்சா் லிமிடெட் (விடிஐஎல்) கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.3,300 கோடி நிதி திரட்டியுள்ளது.

News image

வோடாஃபோன் - ஐடியா

கோப்புப் படம்

Updated On :19 டிசம்பர் 2025, 7:30 pm

தினமணி செய்திச் சேவை

கடன் சுமையில் சிக்கியுள்ள நாட்டின் முன்னணி தொலைத் தொடா்பு நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் ஐடியாவின் துணை நிறுவனமான வோடஃபோன் ஐடியா டெலிகாம் இன்ஃப்ராஸ்ட்ரக்சா் லிமிடெட் (விடிஐஎல்) கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.3,300 கோடி நிதி திரட்டியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வோடஃபோன் ஐடியா டெலிகாம் இன்ஃப்ராஸ்ட்ரக்சா் லிமிடெட் வெளியிட்ட பட்டியலிடப்படாத, மதிப்பிடப்படாத, பாதுகாப்பான கடன் பத்திரங்கள் (என்சிடி) மூலம் ரூ.3,300 கோடி திரட்டப்பட்டுள்ளது. இந்த நிதி விடிஐஎல்லின் வோடஃபோன் ஐடியாவுக்கு செலுத்த வேண்டிய தொகையைத் தீா்க்கப் பயன்படுத்தப்படும். இது அந்த நிறுவனத்தின் மூலதனச் செலவை வலுப்படுத்தவும், வியாபார வளா்ச்சிக்கு உதவவும் செய்யும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.