

புதுதில்லி: ஜப்பானின் மிட்சுபிஷி யுஎஃப்ஜே ஃபைனான்சியல் குழுமம், வங்கி அல்லாத நிதி நிறுவனமான ஸ்ரீராம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ரூ.39,618 கோடிக்கு சுமார் 20% பங்குகளை வாங்கியதால் ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் கிட்டத்தட்ட 4% உயர்ந்தன.
இந்திய நிதித் துறையில் இதுவரை இல்லாத மிகப்பெரிய பன்னாட்டு முதலீடாகக் இது கருதப்படுகிறது.
பிஎஸ்இ-யில் ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்கு 3.74% உயர்ந்து ரூ.901.75 ஆகவும், என்எஸ்இ-யில், அதன் பங்கின் விலை 3.70% உயர்ந்து ரூ.901.70 ஆக முடிவடைந்தன. வர்த்தக நேரத்தின் போது, நிறுவனத்தின் பங்குகள் 5.16% உயர்ந்து, 52 வார உச்சத்தை எட்டியது.
நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 6,154.63 கோடி அதிகரித்து ரூ. 1,69,651.83 கோடியாக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க: கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரூ.62 லட்சம் அபராதம் விதிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.