டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

இன்றைய பங்குச் சந்தை நிலவரம் பற்றி...

News image
கோப்புப் படம்
Updated On :19 டிசம்பர் 2025, 6:13 am

இணையதளச் செய்திப் பிரிவு

வாரத்தின் கடைசி நாளான இன்று(வெள்ளிக்கிழமை) பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 84,756.79 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 397.97 புள்ளிகள் அதிகரித்து 84,879.78 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 112.15 புள்ளிகள் உயர்ந்து 25,927.70 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

இந்த வாரத்தில் முதல் 3 நாள்கள் பங்குச்சந்தை கடும் சரிவுடன் நிறைவு பெற்ற நிலையில் நேற்று ஏற்ற, இறக்கத்தில் மாறிமாறி இருந்து பின்னர் சற்று சரிவுடன் முடிந்தன.

இந்நிலையில் முதலீட்டாளர்களுக்கு ஆறுதலாக பங்குச்சந்தைகள் இன்று லாபத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ், டிஎம்பிவி, இன்ஃபோசிஸ், எல்&டி, ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகியவற்றின் பங்குகள் 2 சதவீதம் வரை உயர்ந்து சென்செக்ஸில் அதிக லாபம் ஈட்டின.

மறுபுறம் எச்சிஎல் டெக், என்டிபிசி, டெக் மஹிந்திரா, பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்து வருகின்றன.

நிஃப்டி மெட்டல், பொதுத்துறை வங்கியைத் தவிர மற்ற அனைத்துத் துறைகளும் ஏற்றம் கண்டு வருகின்றன. அதிகபட்சமாக நிஃப்டி ஹெல்த்கேர் குறியீடு அதிக லாபம் ஈட்டியது.

நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.23 சதவீதம், ஸ்மால்கேப் குறியீடு 0.45 சதவீதம் உயர்ந்துள்ளன.

நேற்று(வியாழன்) அமெரிக்க பங்குச்சந்தைகள் உயர்வுடன் நிறைவு பெற்றன.

அமெரிக்காவில் பணவீக்கம் குறைந்து வருவது இந்திய பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக நிபுணர்கள் கணிக்கின்றனர்.

summary

Stock Market: RIL, Infosys lift Sensex 400 pts, Nifty eyes 26K

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.