

புதுதில்லி: மின்சார இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஏத்தர் எனர்ஜி, மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் அந்நியச் செலாவணி பாதிப்பு உள்ளிட்டவையை காரணம் காட்டி, தனது ஸ்கூட்டர்களின் விலையை ஜனவரி 1 முதல் ரூ.3,000 வரை உயர்த்த உள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.
மூலப்பொருட்கள், அந்நியச் செலாவணி மற்றும் முக்கிய மின்னணு பாகங்களின் விலை உலகளவில் உயர்ந்து வருவதால் இந்த விலை உயர்வு செய்யப்படுவதாக ஏத்தர் எனர்ஜி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் தற்போதைய தயாரிப்பு வரிசையில், 450 சீரிஸ் செயல்திறன் ஸ்கூட்டர்கள் மற்றும் ரிஸ்டா ஸ்கூட்டர் உள்ளிட்டவை இதில் அடங்கும். இவற்றின் தொடக்க விலை ரூ.1,14,546 முதல் ரூ.1,82,946 வரை (புதுதில்லி எக்ஸ்-ஷோரூம் விலை) உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.