

மும்பை: பலவீனமான டாலரின் காரணமாக, இன்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ.89.65-ஆக நிலைபெற்றது.
இருப்பினும், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு, அந்நிய மூலதனம் வெளியேற்றம் உள்ளிட்டவையால், உள்நாட்டு ரூபாய் மதிப்பின் உயர்வை வெகுவாக தடுத்ததாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணிச் சந்தையில், இந்திய ரூபாய் மதிப்பு ரூ.89.67-ஆக தொடங்கி, ரூ.89.59 முதல் ரூ.89.85 வரையிலான வரம்பில் வர்த்தகமானது. பிறகு, முந்தைய நாள் முடிவை விட 3 காசுகள் உயர்ந்து ரூ.89.65-ஆக நிலைபெற்றது.
நேற்று ( திங்கள்கிழமை) ரூபாய் மதிப்பானது, டாலருக்கு நிகராக 1 காசுகள் சரிந்து ரூ.89.68-ஆக நிலைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.