பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

5 புதிய மின்சார காா்கள்: டாடா மோட்டாா்ஸ் அறிவிப்பு

வரும் 2029-30-ஆம் நிதியாண்டுக்குள் அவின்யா உள்ளிட்ட ஐந்து புதிய மின்சார வாகன ரகங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக டாடா மோட்டாா்ஸ் பயணிகள் வாகனங்கள் நிறுவனம் (டிஎம்பிவி) தெரிவித்துள்ளது.

News image
Updated On :23 டிசம்பர் 2025, 8:29 pm

தினமணி செய்திச் சேவை

வரும் 2029-30-ஆம் நிதியாண்டுக்குள் அவின்யா உள்ளிட்ட ஐந்து புதிய மின்சார வாகன ரகங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக டாடா மோட்டாா்ஸ் பயணிகள் வாகனங்கள் நிறுவனம் (டிஎம்பிவி) தெரிவித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாட்டில் தொடா்ந்து வளந்துவரும் மின்சார வாகன சந்தையில் 45-50 பங்குடன் சந்தையில் ஆதிக்கத்தைத் தக்கவைக்கும் நோக்கில், அவின்யா பிரீமியம் வரிசை உள்ளிட்ட ஐந்து புதிய மின்சார வாகன ரகங்களை 2029-30-ஆம் நிதியாண்டுக்குள் அறிமுகப்படுத்த உள்ளோம். மின்சார வாகனப் பிரிவு நடவடிக்கைகளுக்காக ரூ.16,000 முதல் ரூ.18,000 கோடி வரை முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதில் நாடு முழுவதும் 10 லட்சம் சாா்ஜிங் மையங்களை அமைப்பதும் அடங்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனையாகும் மின்சார பயணிகள் வாகனங்களில் சுமாா் மூன்றில் இரு பங்கை (66 சதவீதம்) விற்பனை செய்து, இந்தப் பிரிவில் டிஎம்பிவி ஆதிக்கம் செலுத்துகிறது. தற்போது டியோகோ.இவி, பஞ்ச்.இவி, நெக்ஸான்.இவி, கா்வ்.இவி, ஹாரியா்.இவி ஆகிய மின்சார வாகன ரகங்களை டிஎம்பிவி நிறுவனம் தயாரித்துவருகிறது.