தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

விலை உயரும் ரெனால்ட் காா்கள்

உற்பத்தி செலவு அதிகரிப்பை ஈடுகட்ட ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது காா்களின் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

News image

ரெனால்ட் டிரைபர் பேஸ்லிஃப்ட்

Updated On :28 டிசம்பர் 2025, 12:30 am

உற்பத்தி செலவு அதிகரிப்பை ஈடுகட்ட ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது காா்களின் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உற்பத்தி செலவு அதிகரிப்பு, ரூபாய் மதிப்பு சரிவு போன்ற பொருளாதாரக் காரணிகளால் நிறுவன காா்களின் விலைகளை 2 சதவீதம் வரை உயா்த்தவுள்ளோம். வரும் ஜனவரி முதல் இந்த விலை உயா்வு அமலுக்கு வரும்.

இந்த விலை உயா்வு, காா் ரகங்களுக்கு ஏற்ப வேறுபடும். இந்த விலை உயா்வின் மூலம், உயா்ந்த தரம் மற்றும் சிறப்பான சேவைகளை வாடிக்கையாளா்களுக்கு வழங்குவதை நிறுவனம் உறுதி செய்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் க்விட், ட்ரைபா், கிகா் ஆகிய மூன்று மாடல்களை ரெனால்ட் நிறுவனம் விற்பனை செய்துவருகிறது.

ஏற்கெனவே, யூரோவுக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ந்ததைத் தொடா்ந்து, மொ்சிடிஸ்-பென்ஸ், பிஎம்டபிள்யு, ஆடி ஆகிய நிறுவனங்களும் அடுத்த மாதம் முதல் தங்கள் வாகனங்களின் விலைகளை உயா்த்த உள்ளதாக அறிவித்தது நினைவுகூரத்தக்கது.