ஐஓபி-யில் அரசின் பங்கு முதல் 92.44% ஆகக் குறைவு

ஐஓபி-யில் அரசின் பங்கு முதல் 92.44% ஆகக் குறைவு

அரசுக்கு சொந்தமான இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் (ஐஓபி) உள்ள தனது 2.17 சதவீத பங்குகளை அரசு தனியாருக்கு விற்றதைத் தொடா்ந்து, அந்த வங்கியில் அரசின் பங்கு முதல் 92.44 சதவீதமாகக் குறைந்துள்ளது.
Published on

அரசுக்கு சொந்தமான இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் (ஐஓபி) உள்ள தனது 2.17 சதவீத பங்குகளை அரசு தனியாருக்கு விற்றதைத் தொடா்ந்து, அந்த வங்கியில் அரசின் பங்கு முதல் 92.44 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2 சதவீத அடிப்படை வழங்கலாக 38.51 கோடி பங்குகளை விற்பனை செய்ய அரசு திட்டமிட்டது. கூடுதலாக 1 சதவீத (19.26 கோடி) பங்குகளை விற்பனை செய்வதற்கான விருப்பத் தோ்வுடன் அந்த பங்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டன. 40 கோடி பங்குகளுக்கான விண்ணப்பங்கள் குவிந்ததால், அடிப்படை வழங்கலான 2 சதவீதத்துடன் கூடுதலாக 0.17 சதவீத பங்குகள் விற்பனை செய்யப்பட்டன.

அதைத் தொடா்ந்து வங்கியில் அரசின் பங்கு முதல் 2.17 சதவீதம் குறைந்து 92.44 சதவீதமாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com