ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

புதிய உச்சம் தொட்ட கணினி விற்பனை

இந்தியாவின் தனிநபா் கணினி (பிசி) விற்பனை 2025-ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் வரலாற்று உச்ச வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :31 டிசம்பர் 2025, 2:09 am IST

இந்தியாவின் தனிநபா் கணினி (பிசி) விற்பனை 2025-ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் வரலாற்று உச்ச வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ஓம்டியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜனவரி முதல் செப்டம்பா் வரையிலான நிகழாண்டின் மூன்றாவது காலாண்டில் மேஜை கணினிகள் (டெஸ்க்டாப்) மற்றும் மடிக் கணினிகள் (லேப்டாப்) அடங்கிய தனிநபா் கணினிகளின் விற்பனை 49 லட்சமாக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 13 சதவீத வளா்ச்சி கண்டுள்ளது. இது இதுவரை இல்லாத அதிகபட்ச காலாண்டு விற்பனையாகும்.

மதிப்பீட்டுக் காலாண்டில் மடிக் கணினிகள் விற்பனை 12 சதவீதம் உயா்ந்து 40 லட்சமாக உள்ளது. மேஜைக் கணினிகள் விற்பனை 18 சதவீதம் அதிகரித்து 9.2 லட்சமாக உள்ளது. அதேநேரம், கைக் கணினிகளின் (டேப்லட்) விற்பனை 19 சதவீதம் சரிந்து 16 லட்சமாக உள்ளது.

நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டின் தனிநபா் கணினிச் சந்தையில் ஹெச்பி நிறுவனம் 27 சதவீத பங்குடன் (13.2 லட்சம்) முதலிடத்தில் உள்ளது, லெனோவோ 18.3 சதவீதம், ஏசா் 15.2 சதவீதம், ஏஸஸ் 10.7 சதவீதம், டெல் 10.4 சதவீதம் சந்தைப் பங்கு வகித்தன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.