ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

சோயாபீன் கொள்முதல் காலக்கெடுவை நீட்டித்த மத்திய அரசு!

மாநில அரசுகளின் கோரிக்கைகளைத் தொடர்ந்து சோயாபீன் கொள்முதல் காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்துள்ளதாக வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்தார்.

News image

கோப்புப் படம்

Updated On :13 ஜனவரி 2025, 2:52 pm

DIN

புதுதில்லி: மாநில அரசுகளின் கோரிக்கையை தொடர்ந்து மகாராஷ்டிரத்தில் சோயாபீன் கொள்முதல் காலக்கெடுவை ஜனவரி 31 வரையும், ராஜஸ்தானில் பிப்ரவரி 4 வரையும் மத்திய அரசு நீட்டித்துள்ளதாக வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்தார்.

மகாராஷ்டிரத்தில் முந்தைய காலக்கெடுவான ஜனவரி 12 தேதியும் மற்றும் ராஜஸ்தானுக்கு ஜனவரி 15 என்று இதற்கு முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது கொள்முதல் நடைபெற்று வருகிறது. மாநில அரசின் கோரிக்கையை ஏற்று மகாராஷ்டிர மற்றும் ராஜஸ்தானில் கொள்முதல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளோம்.

தெலுங்கானாவிலிருந்து 25,000 டன் கூடுதல் கொள்முதல் செய்யவும் அனுமதித்து உள்ளோம். அதே வேளையில், ஏற்கனவே அதன் ஆரம்ப இலக்கான 59,508 டன்களை எட்டியுள்ளது.

நாடு முழுவதும் மொத்த சோயாபீன் கொள்முதல் இதுவரை 13.68 லட்சம் டன்களை எட்டியுள்ளது.

மகாராஷ்டிர மற்றும் ராஜஸ்தானில் கொள்முதல் ஆதரவு விலை திட்டத்தின் கீழ் கொள்முதல் நடைபெறுகிறது. சோயாபீன் குறைந்தபட்ச ஆதரவு விலையான குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4,892க்கு என்று நிர்ணயம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.