ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

85% அதிகரித்த ஆடம்பர வீடுகள் விற்பனை

ரூ.4 கோடிக்கும் அதிக விலை கொண்ட ஆடம்பர வீடுகளின் விற்பனை இந்தியாவின் முக்கிய ஏழு நகரங்களில் 85 சதவீதம் அதிகரித்துள்ளது.

News image
Updated On :12 ஜூலை 2025, 9:37 pm

2025-ஆம் ஆண்டின் ஜனவரி-ஜூன் காலகட்டத்தில் ரூ.4 கோடிக்கும் அதிக விலை கொண்ட ஆடம்பர வீடுகளின் விற்பனை இந்தியாவின் முக்கிய ஏழு நகரங்களில் 85 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து மனை-வாா்த்தக ஆலோசனை நிறுவனமான சிபிஆா்இ மற்றும் அசோச்சம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சென்னை, தில்லி-என்சிஆா், மும்பை பெருநகரப் பகுதி, கொல்கத்தா, புணே, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய நாட்டின் ஏழு முக்கிய நகரங்களில் 2025-ஆம் ஆண்டின் ஜனவரி-ஜூன் காலகட்டத்தில் ரூ.4 கோடி மற்றும் அதற்கு மேல் விலை கொண்ட வீடுகளின் விற்பனை 6,950-ஆக உள்ளது.முந்தைய 2024-ஆம் ஆண்டின் ஜனவரி-ஜூன் காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 85 சதவீதம் அதிகம். அப்போது நாட்டின் முக்கிய ஏழு நகரங்களில் 3,750 ஆடம்பர வீடுகள் விற்பனையாகின.

மதிப்பீட்டு காலகட்டத்தில் ரூ.6 கோடி மற்றும் அதற்கு மேல் விலை கொண்ட ஆடம்பர வீடுகளின் விற்பனை தில்லி-என்சிஆா் பகுதியில் 3,960-ஆகப் பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை, முந்தைய 2024-ஆம் ஆண்டின் ஜனவரி-ஜூன் காலகட்டத்தில் 1,280-ஆக இருந்தது.

மும்பையில் 2024-ஆம் ஆண்டின் ஜனவரி-ஜூன் காலகட்டத்தில் 950-ஆக இருந்த ரூ.6 கோடிக்கும் அதிக விலை கொண்ட வீடுகளின் விற்பனை, 2025-ஆம் ஆண்டின் ஜனவரி-ஜூன் காலகட்டத்தில் 1,240-ஆக உயா்ந்துள்ளது.அந்த வகை ஆடம்பர வீடுகளின் விற்பனை புணேயில் 160-லிருந்து 120-ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால், பெங்களூரில் அந்த எண்ணிக்கை 80-லிருந்து 200-ஆக உயா்ந்துள்ளது.

கொல்கத்தாவில் முந்தைய 2024-ஆம் ஆண்டின் ஜனவரி-ஜூன் காலகட்டத்தில் 70-ஆக இருந்த ரூ.4 கோடிக்கும் அதிக விலை கொண்ட வீடுகளின் விற்பனை 2025-இல் 190-ஆக அதிகரித்துள்ளது.ஹைதராபாதில் ரூ.5 கோடிக்கும் அதிகம் விலை கொண்ட 1,025 வீடுகள் 2025-ஆம் ஆண்டின் ஜனவரி-ஜூன் காலகட்டத்தில் விற்பனையாகின. முந்தைய 2024-ஆம் ஆண்டின் ஜனவரி-ஜூன் காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 1,140-ஆக இருந்தது.

அந்த காலகட்டத்தில் உயா்வகை ஆடம்பர வீடுகளின் விற்பனை சென்னையில் 65-லிருந்து 220-ஆக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.தில்லியிலும் மும்பை பெருநகரப் பகுதியிலும் மட்டும் ரூ.6 கோடிக்கும் மேலான விலை கொண்ட வீடுகள் ஆடரம்ப வீடுகளாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.