பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

டிராக் டார்க் கண்ட்ரோல் வசதியுடன் ஆர்டிஆர் 310!

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 மாடல் பைக் பற்றி...

ஆர்டிஆர் 310 - படம்: டிவிஎஸ்

Published On :

அப்பாச்சி ஆர்டிஆர் 310 பைக்கின் மேம்படுத்தப்பட்ட மாடலை டிவிஎஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஆர்டிஆர் 310 பைக் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு முதல்முறையாக மேம்படுத்தப்பட்ட மாடல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த பைக்கின் என்ஜின் 312 சி.சி., 6 கியர், 11 லிட்டர் பெட்ரோல் டேங்க் வசதியுடன் 169 கிலோ எடையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், டிராக் டார்க் கண்ட்ரோல் பிரேக்கிங் சிஸ்டம் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. பைக் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது அவசர காலத்தில் பிரேக் பிடித்தால், கீழே சறுக்காத வகையில் சக்கரத்தின் சுழற்சியை முற்றிலும் நிறுத்தாமல், வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும்.

ப்ளூடூத் வசதியுடன் 5.5 அங்குல டிஸ்பிளே இருக்கிறது. சக்கரத்தின் அழுத்தத்தை திரையில் கண்காணிக்க முடியும். ப்ளூடூத்தில் ஓடிக்கொண்டிருக்கும் பாடலை மாற்றிக் கொள்ளலாம். முகப்பு விளக்கின் வெளிச்சத்தை கண்ட்ரோல் செய்து கொள்ள முடியும்.

இந்த பைக்கின் முன்புறம் மற்றும் பின்புற சஸ்பென்ஷனை முழுமையாக ஏற்றி இறக்கிக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கருப்பு, மஞ்சள், சிவப்பு ஆகிய நிறங்களில் ஆர்டிஆர் 310 பைக் சந்தைக்கு வந்துள்ளது. தொடக்க விலை ரூ. 2.4 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Summary

TVS has launched an upgraded model of the Apache RTR 310 bike.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.