
பொதுத் துறை வங்கியான பேங்க் ஆஃப் இந்தியாவின் (பிஓஐ) நிகர லாபம் கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 32 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், வங்கியின் நிகர லாபம் ரூ.2,252 கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் அது ரூ.1,706 கோடியாக இருந்தது.
அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிகர லாபம் 32 சதவீதம் அதிகரித்துள்ளது.மதிப்பீட்டு காலாண்டில் வங்கியின் நிகர வட்டி வருவாய் ரூ.6,243 கோடியிலிருந்து 3 சதவீதம் குறைந்து ரூ.6,068 கோடியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.