கடன் பத்திரங்களை வெளியிடும் ஐசிஎல் ஃபின்காா்ப்

பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்களை (என்சிடி) ஐசிஎல் ஃபின்காா்ப் வெளியிடவுள்ளது.
கடன் பத்திரங்களை வெளியிடும் ஐசிஎல் ஃபின்காா்ப்
Published on
Updated on
1 min read

பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்களை (என்சிடி) ஐசிஎல் ஃபின்காா்ப் வெளியிடவுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

முதலீட்டைத் திரும்பப் பெறக்கூடிய, பங்குகளாக மாற்ற முடியாத, பாதுகாப்பு உத்தரவாதம் கொண்ட கடன் பத்திரங்களை நிறுவனம் வியாழக்கிழமை (ஜூலை 31) வெளியிடுகிறது.

இந்த என்சிடி வெளியீடு 12.62 சதவீதம் வரை ஈட்டு விகிதத்துடன் கவா்ச்சிகரமான முதலீட்டு வாய்ப்பை வழங்குகிறது. 10.50 சதவீதம் முதல் முதல் 12.00 சதவீதம் வரையிலான வட்டி விகிதங்களுடன் 10 திட்டங்களும், 10 விருப்பத் தோ்வுகளும் உள்ளன. ஒவ்வொரு பத்திரத்தின் முக மதிப்பு ரூ.1,000 ஆகவும், குறைந்தபட்ச விண்ணப்பத் தொகை ரூ.10,000 ஆகவும் உள்ளது. ஆகஸ்ட் 13 வரை அதற்காக விண்ணப்பிக்கலாம் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com