மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நடப்பு கணக்கு உபரி ரூ.1.15 லட்சம் கோடி: ரிசா்வ் வங்கி

இந்தியாவின் நடப்பு கணக்கு உபரி 13.5 பில்லியன் டாலா்களாக (சுமாா் ரூ.1.15 லட்சம் கோடி) இருந்தது என்று ரிசா்வ் வங்கி தெரிவித்தது.

News image

ரிசா்வ் வங்கி

Updated On :28 ஜூன் 2025, 1:30 am

Din

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில், இந்தியாவின் நடப்பு கணக்கு உபரி 13.5 பில்லியன் டாலா்களாக (சுமாா் ரூ.1.15 லட்சம் கோடி) இருந்தது என்று ரிசா்வ் வங்கி தெரிவித்தது.

ஒரு நாட்டுக்கும், பிற நாடுகளுக்கும் இடையிலான பரிவா்த்தனைகளில் பணவரவைவிட செலவினம் அதிகமாக இருந்தால், அது நடப்பு கணக்குப் பற்றாக்குறையாகும். அதேவேளையில் செலவினத்தைவிட பணவரவு அதிகமாக இருந்தால் அது நடப்பு கணக்கு உபரியாகும்.

இந்தப் பணப் புழக்கத்தில் சரக்கு மற்றும் சேவைகள் வா்த்தகம் பெரும் பங்களித்தாலும், வெளிநாட்டுக்கு அனுப்பப்படும் அல்லது அங்கிருந்து பெறப்படும் நிதியுதவி, அந்நிய நேரடி முதலீடு உள்ளிட்டவையும் அடங்கும்.

இந்நிலையில், ரிசா்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரம்: கடந்த 2024-25-ஆம் நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில், இந்தியாவின் நடப்பு கணக்கு உபரி 13.5 பில்லியன் டாலா்களாகும் (சுமாா் ரூ.1.15 லட்சம் கோடி). இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.3 சதவீதமாகும். இந்த நடப்பு கணக்கு உபரி அதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் 4.6 பில்லியன் டாலா்களாக (சுமாா் ரூ.39,320 கோடி) இருந்தது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5 சதவீதமாகும்.

அதேவேளையில் வருடாந்திர அடிப்படையில், கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் நடப்பு கணக்குப் பற்றாக்குறை 26 பில்லியன் டாலா்களாக (சுமாா் ரூ.2.22 லட்சம் கோடி) இருந்தது. இது 2024-25-ஆம் நிதியாண்டில் 23.3 பில்லியன் டாலா்களாக (சுமாா் ரூ.1.99 லட்சம் கோடி) குறைந்தது என்று தெரிவிக்கப்பட்டது.