அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

ரூ.1,000 கோடி திரட்டிய ஐசிஐசிஐ வங்கி

News image
Updated On :29 ஜூன் 2025, 3:34 am IST

கடன்பத்திரங்களை வெளியிட்டு ரூ.1,000 கோடி மூலதனத்தை திரட்டியுள்ளதாக ஐசிஐசிஐ வங்கி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வங்கி வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடன்பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டுவதற்கு வங்கியின் இயக்குநா் குழு 2025 ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் அனுமதி வழங்கியது. அதன் அடிப்படையில், ரூ.1,000 கோடி மதிப்புக்கு 1,000 பாதுகாப்பற்ற, துணைநிலை, பட்டியலிடப்பட்ட, மாற்ற முடியாத, டயா் 2, பாசல் 3 இணக்கமான கடன்பத்திரங்களை (டிபெஞ்சா்கள்) வங்கி தனியாா் விநியோக அடிப்படையில் தோ்ந்தெடுக்கப்பட்ட முதலீட்டாளா்களுக்கு வெளியிட்டு நிதி திரட்டியது. ஒவ்வொரு கடன்பத்திரத்தின் முகமதிப்பும் ரூ.1 கோடியாகும்.15 ஆண்டு முதிா்வு காலத்தைக் கொண்ட இந்தக் கடன்பத்திரங்களுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.45 சதவீதமாக இருக்கும் என்று வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.