இந்திய ரூபாயின் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ.87.33-ஆக முடிவு!

அந்நிய நிதி வெளியேற்றத்தால் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ.87.33 ஆக முடிந்தது.
இந்திய ரூபாயின் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ.87.33-ஆக முடிவு!
PTI Graphics
Updated on
1 min read

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, 38 காசுகள் சரிந்து ரூ.87.33 ஆக இன்று முடிவடைந்தது.

உலகெங்கிலும் நிச்சயமற்ற கட்டண தன்மைக்கு மத்தியில் நிலையற்ற கச்சா எண்ணெய் விலை மற்றும் அந்நிய நிதியின் தடையற்ற வெளியேற்றமே சரிவுக்கு காரணமாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.87.24 ஆக தொடங்கி, வர்த்தக அமர்வின் போது, ​​டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு ரூ.87.36 ஆகக் குறைந்தது, வர்த்தக நேர முடிவில் 38 காசுகள் சரிந்து ரூ.87.33 ஆக நிலைபெற்றது.

முன்னதாக, பிப்ரவரி 5 ஆம் தேதி டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 39 காசுகள் காசுகள் சரிந்து செங்குத்தான இழப்பை பதிவு செய்தது.

அந்நிய செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.86.95-ஆக இருந்தது.

இதையும் படிக்க: நிலையற்ற வர்த்தகத்தின் மத்தியில் சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com