பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

எலான் மஸ்க் உடன் இணையும் ஏர்டெல்!

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் மூலம் அதிவேக இணைய சேவையை வழங்க எலான் மஸ்க் உடன் இணைந்துள்ளது ஏர்டெல்.

News image

ஏர்டெல், எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் - கோப்புப் படங்கள்

Updated On :11 மார்ச் 2025, 8:52 pm IST

ஏர்டெல் நிறுவனம் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் மூலம் அதிவேக இணைய சேவையைப் பெறுவதற்காக எலான் மஸ்க் உடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்திய தொழிலதிபரான சுனில் பார்தி மிட்டலுக்குச் சொந்தமான ஏர்டெல் நிறுவனம், நாடு முழுவதும் அதிவேக இணைய சேவையை வழங்குவதற்காக அமெரிக்கத் தொழிலதிபரான எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

அமெரிக்க விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸுக்கு சொந்தமான ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள், சர்வதேச அளவில் தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த செயற்கைக்கோள் மூலம் நாடு முழுவதுமுள்ள கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளுக்கு அதிவேக இணைய சேவையை வழங்க ஏர்டெல் முடிவு செய்துள்ளது.

இந்த இரு நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தம் ஒழுங்குமுறை அனுமதிகளுக்குட்பட்டதாக உள்ளது. இதனால் இந்திய தேசிய விண்வெளி அங்கீகார மையம் மற்றும் மத்திய தொலைத்தொடர்புத் துறை ஒப்புதலுக்காக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் காத்திருக்கிறது.

எலுசாட் ஒன்வெப் நிறுவனத்தின் மூலம் இணைய சேவைகளை ஏர்டெல் நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த இணைய சேவையை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் தொலைதூர கிராமங்கள், அங்குள்ள கல்வி நிலையங்கள், மருத்துவமனை மற்றும் தொழில் மேம்பாட்டிற்காக ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவையையும் ஏர்டெல் பயன்படுத்தவுள்ளது.

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கோபால் விட்டல் இது குறித்து பேசியதாவது,

''ஏர்டெல் நிறுவனத்துக்கு ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவையை வழங்க ஸ்பேஸ் எக்ஸ் உடன் இணைந்துள்ளோம். இது நாட்டின் அடுத்த தலைமுறை செயற்கைக்கோள் இணைப்பு சேவைக்கு முன்மாதிரியாகவும் மைல் கல்லாகவும் இருக்கும். இதன்மூலம் தொலைதூர கிராமப் பகுதிகளுக்கும் அதிவேக இணைய சேவையை வழங்கும் இலக்கை எட்ட முடியும். இந்திய பயனர்களுக்கு குறைந்த விலையில் இணைய சேவையை வழங்கிவரும் ஏர்டெல் நிறுவனத்தின் தேவையை ஸ்டார்லிங்க் பூர்த்தி செய்து மேம்படுத்தும்'' எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.