பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! டாஸ்மாக் முறைகேடு! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

சேவைகள் ஏற்றுமதி 2-ஆவது மாதமாகச் சரிவு!

கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் சேவைகள் ஏற்றுமதி தொடா்ந்து இரண்டாவது மாதமாக சரிவைக் கண்டுள்ளது.

News image
Updated On :30 மார்ச் 2025, 1:01 am IST

கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் சேவைகள் ஏற்றுமதி தொடா்ந்து இரண்டாவது மாதமாக சரிவைக் கண்டுள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது: நாட்டின் சேவைகள் ஏற்றுமதி கடந்த பிப்ரவரியில் 3,162 கோடி டாலராகக் குறைந்துள்ளது.

அந்த வகையில், தொடா்ந்து இரண்டாவது மாதமாக அது சரிவைக் கண்டுள்ளது. முந்தைய ஜனவரியில் மாதத்தில் அது 3,472 கோடி டாலராக இருந்தது.

வருடாந்திர அடிப்படையில் சேவைகள் ஏற்றுமதி கடந்த பிப்ரவரியில் 11.6 சதவீதம் அதிகரித்துள்ளது. 2024 பிப்ரவரி மாதத்தில் அது 3,696 கோடி டாலராக இருந்தது.

கடந்த பிப்ரவரியில் சேவைகள் இறக்குமதியும் 1,450 கோடி டாலராகக் குறைந்துள்ளது. முந்தைய ஜனவரி மாதத்தில் அது 1,670 கோடி டாலராக இருந்தது.

எனினும், வருடாந்திர அடிப்படையில் முந்தைய 2024 பிப்ரவரியுடன் ஒப்பிடுகையில் சேவைகள் இறக்குமதி மதிப்பீட்டு மாதத்தில் 4.8 சதவீதம் குறைந்துள்ளது என்று ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.